ஏது ? ஏன் ? எப்படி ? (தமிழ் கவிதை) Why-How-which-love

ஏது ? ஏன் ? எப்படி ?
நான் புன்னகைத்து கொண்டே 
இருக்கிறேன் !
 என் விழிகள் 
இதழ்கள் என அனைத்தும் 
புன்னகையால் பூக்கிறது ! 
என்னால் என்னை சுற்றி 
அனைவருக்கும் புன்னகை 
தவழுகிறது ! 
ஏன் என் மனம் 
மட்டும் எதையோ தொலைத்ததை
போல் உணர்கிறது ! எதை 
தொலைத்தேன் என்று 
விளங்கவில்லை ! 
மனம் மட்டும்   
எதையோ இழந்து விட்டதாய் 
உணர்த்துகிறது !
 எது ஏன் எப்படி அறியேன்
 அறியவும் விழையேன்
என் மனமே !
லவ்லி

2 comments:

காதல் அலை- Love Wave