இசையே இன்பம் (தமிழ் கவிதை) - Forever Love Music

இசையே இன்பம்

எத்தனை ஆனந்தம் என்னுள்
இசை 
அனைத்திற்கும் மருந்து !
மகிழ்ச்சி , சோகம் , வலி 
இன்னும்எண்ணற்ற 
உணர்வுகளுக்கு 
மகிழ்வான தீர்வை தரும் நம்மவர்
நினைவையும்
 மனதில் தேக்கி 
வைத்து கொள்ளவும் ! 
இன்று 
என் மகிழ்ச்சி எல்லையை கடந்த 
ஆழிபேரலை தான் 
ஆனால் 
அழிவை தருவதல்ல 
ஆனந்தத்தை நல்குவது !
லவ்லி

என்ன காரணம் ? (தமிழ் கவிதை) -what-is-a-reason

என்ன காரணம் ?

உன் நினைவு 
கொடுக்கும் வலி
கூட எனக்கு சுகமாக ஏன் 
இருக்கிறது ! 
புரியவில்லை நான் 
ஏன் வருத்தம் கொள்ளவில்லை !
என்னுள் ஏதும் பிழையா ? 
உன் நினைவுகள் 
மட்டுமே நான்
மகிழ காரணம் !
 ஏதோ ஒரு 
குழப்பம் உள்ளது அந்த 
மகிழ்வின் 
இறுதியில் கண்கள்
மட்டும் கண்ணீர் சிந்துகின்றன !

மன்னவனின் மன மயக்கம் (தமிழ் கவிதை) -krishnan-leelaigal

மன்னவனின் மன மயக்கம்
ஆயிரம் முறை பார்த்திருப்பேன் 
உன்னை ஆனாலும் இன்று நீ 
புதியவளாக என் முன் ! 
பட்டுத்தி  வாஞ்சையாய் 
வளையல் 
பூட்டி இரு புருவ மத்தியில் 
திலகம் இட்டு கருமை அருவியாம்உன் 
குழலில் மலர் சூடி உன் 
ரோஜாக்கரங்களில் 
மருதாணி 
மேலும் வண்ணம் சேர்க்க ! 
மங்கை அவள் கால் 
சிலம்பொழிக்க  
அன்னமாய் 
அசைந்து வருகையில் இந்த 
மன்னவனின் மனமும்
மயங்காதோ பேரழகில் !
லவ்லி

என் ஜீவன் ஆனாய் (தமிழ் கவிதை)- Inside-with-you

என் ஜீவன் ஆனாய்
ஏய் எங்கு சென்றாய்
என் கண்களை 
விட்டு விலகி
நீ காற்றில்
 கரைந்தாலும்
நிதம் என் சுவாசமாய்
என் ஜீவனில் 
கலந்துவிட்டாய்
என் கண்ணா !

நான் உணர்ந்தேன் நீ (தமிழ் கவிதை) - feeling with your love

உரைத்து விட்டாய் உன் உள்ள
காதலை ! 
வேறுபாடுகளை
உணர்த்தி உணர்த்தி அவள் 
வேதனைகளை அதிகப்படுத்தி
நீயும் வேதனையுற்று ! 
பார்வைகள், பேச்சுக்கள் , 
தழுவல்கள் என இவைகள் 
மட்டும் இணைந்தது அல்ல
காதல் ! 
மனதின் பரிமாற்றங்கள்,
எண்ணத்தின் தழுவல்கள் , 
தொலைதூரம் கூட 
தொலைந்து
போன நிமிடங்கள் என
அனைத்தும் இணைந்ததே 
காதல்உணர்ந்து உணர்ந்து உள்ளம் 
உருகுவதே காதல் ! 
நான் உணர்ந்தேன் நீ........
லவ்லி

கர்வம் கலைந்தேன் - (தமிழ் கவிதை) - My piece of love


கர்வம் கலைந்தேன்
என் புன்னகையை எண்ணி
கர்வம் கொண்டேன் ! 
இன்று 
ஆயிரம் மலர்களின் இதழ்கள்
மலர்ந்ததை
 கண்ட போது
என் கர்வம் ஒடிங்கி போனது
என்னுள்ளும் 
இதழ்  கொண்டு 
காதல் அம்பை 
ஏய்துவிட்டாள் !
லவ்லி

என் நிலவே (தமிழ் கவிதை) - full moon is mine with love

என் நிலவே
என் இதயக்கூட்டில் இருந்து 
தூரத்து நிலாவான 
உன்னை 
ரசித்து கொண்டு இருந்தேன் 
மகிழ்வாய் ! 
இந்த மேகத்திற்கு
ஏன் இத்தனை வெறுப்பு என் 
மீது என் நிலவை 
நான் ரசிக்க
முந்தானை  கொண்டு முகம்‌ 
மறைக்கிறாள் !
 சொல்லி விடு 
அவளிடம் நான் 
மூத்தவள் என்று 
காலத்திலும் காதலிலும் !
லவ்லி

இணையம் அன்பு (தமிழ் கவிதை) - Love-forever

இணையம் அன்பு
மறக்கவும் விலகவும் 
விரும்புகிறேன் நீ கூறிய 
வார்த்தைகளில் எனக்கு பொய்
என்று தோன்றியவற்றை ! 
நினைக்கவும் இணைக்கவும்
விரும்புகிறேன் நீ கூறிய காதல்
வார்த்தைகளை ! நிகழுமோ 
தொலையுமோ என்‌ மனம்
உன்னோடு மீண்டும் இணையா
உன் அன்போடு !
லவ்லி

ஏழடிக்கான ஏக்கம் (தமிழ் கவிதை) - feeling of love (Tamil Kavithaigal)

ஏழடிக்கான ஏக்கம்
என் பாதம் தொட்டு உன் உரிமையை 
நிலை நாட்ட விரும்பினாய்
நானும் அதற்காகவே 
காத்திருக்கிறேன்
உன் கைகளால் நீ என்
உரிமையை நிலைநாட்ட
வானில் தெரியும் அவளை 
இருவரும் இணைந்து 
காண
ஏழடி எடுத்து வைத்து 
உன்னவள் ஆக 
நானும் ஏக்கம் கொள்கிறேன்

நதியே நீ எங்கே (தமிழ் கவிதை)- Where my heart (Tamil Kavithaigal)

நதியே நீ எங்கே
உன்னை தேடி அலைந்தது 
போதும் இந்த தேடல் 
என்னை எங்கெல்லாமோ 
அழைத்து சென்று விட்டது !
ஒரு நதி போல் இனி ஓடுவதற்கு என்னிடம் 
பாதை இல்லை இங்கே தங்கி விடுகிறேன் !
நீயாக என்னை சேர்வாய் என்ற
எண்ணத்தில் காத்திருக்கிறேன் 
விரைவாய் விரைவாக !

மன்னித்து விடு மனமே (தமிழ் கவிதை) - Forgive my heart (Tamil Kavithaigal)

மன்னித்து விடு மனமே
மன்னித்து விடு மனமே என்றுமே 
உன்னை நான் உடைத்து 
கொண்டே இருக்கிறேன் ! 
உன் வலிகளை 
உணர்கிறேன் 
இருந்தும் நான் உடைக்கும் 
போதெல்லாம்!
நீ என்னிடம் கொண்ட 
காதலை மட்டுமே 
காண்கிறேன் காதலே !
உன்னை என் மனம் முழுவதும் 
உணர்கிறேன் இனி
 நான் உடைந்தாலும் கூட 
உன்னை உடைய விடமாட்டேன்!
உண்மை தான் 
இன்று நான் 
அடைகிறேன் 
நீ உடையாமல் இருக்க !

ஆழி பேரலையான காதல் (தமிழ் கவிதை) - Deep one side love (Tamil Kavithaigal)

ஆழி பேரலையான காதல்
உன்னால் தான் நான் இன்று 
என்னையே ரசிக்க 
ஆரம்பித்தேன் !
ஆனால் அங்கு 
தான் உணர்ந்தேன் 
நான் என்னை ரசிக்கவில்லை !
உன் வார்த்தைகளை தான் 
ரசிக்கிறேன் என்று! 
உன் காதல் கடலில் கலந்து மூழ்கி 
உன்னுள் இணைந்து விட்டேன்!
உன்னில் இருந்து 
என்னை பிரித்து 
செல்ல யாராலும் இயலாது!
ஆழி பேரலையாக அடித்து 
செல்லும் உன் காதல் !

மீண்டும் ராதாகிருஷ்ணராய் (தமிழ் கவிதை) - Again love story - Radha Krishnan - (Tamil Kavithaigal)

மீண்டும் ராதாகிருஷ்ணராய்
மீண்டும் பிருந்தாவனத்தில்
நாம் ராதாகிருஷ்ணனாய் 
பிறக்க வேண்டும் அங்கே யமுனை
நதி கரையோரம்
 நீ குழலிசைக்க உன் குழல் ஓசையில் 
நான் என் உலகம் மறக்க வேண்டும் !

பௌர்ணமி நிலவில் நம் ராசலீலை தொடரவேண்டும் 
அங்கே குயில்கள் நம் காதல் 
கீதம் பாட வேண்டும் வனம் 
எங்கிலும் நம் காதல் பரவும்பொழுது மரங்கள்
மலர்கள் சொரிந்திட வேண்டும் !

இறுதி வரை நான் உன் காதலாக
மட்டுமே இருக்க வேண்டும்
உன்னை விட்டு பிரியும் 
ஒரு நாள் மட்டும் இம்முறை 
அந்த பிருந்தாவனம் சந்திக்கக் கூடாது !

உன் கைகள் கோர்த்த ஒரு நொடி (தமிழ் கவிதை) - Minutes of Love (Tamil Kavithaigal)

உன் கைகள் கோர்த்த ஒரு நொடி
உன் விரலோடு விரல் 
கோர்த்த 
அந்த நொடி கோடி யுகங்கள்
 உன்னை 
கூடிக்கிடந்ததாய் 
தோன்றுதே உன் தீண்டல்
 என்னை 
ஒவ்வொரு நொடியும் 
மரணித்து உயிர் 
பெற செய்கிறது

முரண்பாடான காதலின் மூத்தவர்கள் (தமிழ் கவிதை) - Genius Lover (Tamil Kavithaigal)

முரண்பாடான காதலின் மூத்தவர்கள்
முரண்பாடான காதலில் வெற்றி 
கண்ட முதல்வர்கள் அவளின் மனம் மட்டுமே 
அவனுக்கு தேவைப்பட்டது !
ஆயிரம் கோபியர்களின் நடுவில்
 ராதை காதல் மட்டுமே 
கண்ணனுக்கு கண்ணில் பட்டது !
மூத்தவள் ஆனாலும் அவள் 
அன்பில் அளவளாவுவதை 
விரும்பியவன் !
அவன் புல்லாங்குழல் இசைக்கு 
தன் மனதை பறிகொடுத்தவள் !
இணையா காதல் ஆனால் என்றும் 
அவனை அழைக்க
 உன் பெயர் தேவைப்பட்டது
ராதாகிருஷ்ணன் !

கணையாழியின் காதல் ( தமிழ் கவிதை) - Krishnan Love (Tamil Kavithaigal)

கணையாழியின் காதல்
நீ கொடுத்த கணையாழியை 
கையில் அணிந்து 
உன் வரவை 
எதிர்பார்த்து காத்திருக்கும்
சகுந்தலை நான்
ஊடல் கொண்ட 
போது எல்லாம் நம் 
நினைவுகளில் நீல கடலில் 
கரைந்த பொழுது 
கணையாழியும் என்னை 
கை விட்டது
உன் நினைவுகள் 
மட்டுமே துணை 
கொண்டு துயில் கொள்கிறேன்
என் நினைவற்று 
நீ உன் மாளிகையில் 
மனம் மகிழ நான் 
உன் நினைவுகளில் 
முழ்கி பசலை 
கொண்டு வாடுகிறேன் !

தனிமை (தமிழ் கவிதை) - Silence for End of Love (Tamil Kavithaigal)


தனிமை - Silence for End of Love 
அன்று நாம் தனிமையில் 
இருந்ததை
ஆயிரம் கண்கள்
பார்த்தாய் உணர்ந்தேன்!
ஆனால் 
இன்று ஆயிரம் 
கண்கள் 
என்னை பார்த்தும் 
தனிமையை 
உணர்ந்தேன் 
காரணம் இன்று 
என் அருகில்
நீ இல்லாததால் !

மனம் ஏங்கும் மழலை தாகம் - Thirsty for Baby


மனம் ஏங்கும் மழலை தாகம்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சேர்ந்தவள் 
அடிவயிறு நிரம்பாததால் 
அழைகளிக்கபடுகிறாள் அனாதையாக !
இரத்தத்தில் உதிக்கும் 
சூரியனை பெற்றெடுக்க
 முயல்கிறாள் ஆனால் மேற்கில் 
மறைந்தவனோ உதிக்க 
மறுக்கிறான் இவள் மடியில் !

காதல் அலை- Love Wave