மீண்டும் ராதாகிருஷ்ணராய் (தமிழ் கவிதை) - Again love story - Radha Krishnan - (Tamil Kavithaigal)

மீண்டும் ராதாகிருஷ்ணராய்
மீண்டும் பிருந்தாவனத்தில்
நாம் ராதாகிருஷ்ணனாய் 
பிறக்க வேண்டும் அங்கே யமுனை
நதி கரையோரம்
 நீ குழலிசைக்க உன் குழல் ஓசையில் 
நான் என் உலகம் மறக்க வேண்டும் !

பௌர்ணமி நிலவில் நம் ராசலீலை தொடரவேண்டும் 
அங்கே குயில்கள் நம் காதல் 
கீதம் பாட வேண்டும் வனம் 
எங்கிலும் நம் காதல் பரவும்பொழுது மரங்கள்
மலர்கள் சொரிந்திட வேண்டும் !

இறுதி வரை நான் உன் காதலாக
மட்டுமே இருக்க வேண்டும்
உன்னை விட்டு பிரியும் 
ஒரு நாள் மட்டும் இம்முறை 
அந்த பிருந்தாவனம் சந்திக்கக் கூடாது !

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave