காதல் குழல் krishna flute

காதல் குழல்
மோகம் எது காதல் எது என்று
உணர்ந்தேன் கண்ணா ! 
வேண்டாம் என்ற 
பின் வரும் 
குரோதமே உணர்த்தியது  
வெற்று மோகமே அவள் 
கொண்டாள் என்று  ! 
காதல் 
என்ன வெறும் குழலா 
உடைத்தால் உடைவதற்கு அது 
உயிரின் ஓர் அங்கம் 
உள்ளத்தின்
முழு பகுதி உணர்த்தவற்கு !
லவ்லி

கண்ணார காண - love see

கண்ணார காண
உன் அமுத கானம் கேட்க
காத்திருந்த நொடிகள் 
எல்லாம்
கனவாய் கலைந்து போக 
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து 
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர 
என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
 நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது
என் கண்ணீரும் 
வறண்டது கண்ணார 
நான் காண காலம் இன்னும் ஆகுமோ !

மனதின் காட்சி பிழை - Radha One Side Love

மனதின் காட்சி பிழை
மாற்று கருத்தை மனம் அறிந்த
பின்னும் ஏன் உன் எண்ணங்கள்
மனதை மயிலிறகாய் 
வருடுகிறது கண்ணா ! உன் 
குழல் இசை கேட்கும் போது 
எல்லாம் ஓடி வந்த ராதை இன்று
உன் குழல் முறிக்க காரணம் 
என்ன ?  மீண்டும் கேட்கும் குழல்
ஓசை அவளை உன்னை நோக்கி
அழைக்க கூடாதென்றா ! ம்ம் ம்ம்
காதல் என்றும்  மனதின் 
காட்சி பிழை தான் !
லவ்லி

சுயவடிவிழந்தாய் - One Side Love

சுயவடிவிழந்தாய்
தன்னை தானே உருக்கி 
கொண்டு பலவித 
அச்சுகளில்
வார்க்கப்பட்ட  உலோகம் தன் 
சுயவடிவு இழக்குமாம் 
அதுபோல
பெண்ணும் தன் உணர்வை  
உருக்கி மற்றவர்களுக்காக
பல்வேறு 
அச்சுகளில் ஊற்ற
அவை உருமாறின மற்றவர் 
எண்ணம் போல் 
அவளின்‌
சுயவடிவும் அங்கே 
மாற்ற தான் படுகிறது !
லவ்லி

இயற்கை மருத்துவம் - தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி -Headache Medicine



அதிமதுர சூரணம்- தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீர
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் பொடி -35 கிராம்
சோம்பு பொடி - 35 கிராம்
சர்க்கரை - 35 கிராம்
கொடிவேலி வேர்ப்பட்டை பொடி - 17 கிராம்



செய்முறை :
அதிமதுரம் , சோம்பு , சர்க்கரை , கொடிவேலி வேர்ப்பட்டை இவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை :
இந்த பொடியை 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து  தேன், நெய் அல்லது பால் இவற்றில் ஏதோ ஒன்றில் கலந்து உட்கொண்டால் தலைவலி , ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீரும்

-Dr.சுஜிதா

வான் மகன் மண் மகள் - Boy and Girl With Love

வான் மகன் மண் மகள்
வான் மகன் அவன் 
கோடை மழையென கொட்டும் 
போது மண் மகளின் மனம் 
என்ன மறுக்கவா‌ செய்யும் ! 
ஆசை என அவன் அணைக்க 
தன் வெட்கத்தை மண்ணவள் 
தன் சுகந்தத்தால்
வெளிப்படுத்தினாள் !
லவ்லி

அவன் வெட்கம் - Lovely Girl - Tamil Kavithai

அவன் வெட்கம் - Lovely Girl 
இருண்ட மேகங்களுக்கு 
இடையே இருந்து  
என்னை 
ரசித்தது இரு நிலாக்கள்  
அவற்றை அவன் 
விழியென 
எண்ணலாமா ! 
என் வளர்ந்த 
குழந்தையின்  வெட்கத்தை 
பார்த்து பூரித்து 
போனேன் !
கண்டதில்லை இது வரை 
அவன் அசட்டு
 சிரிப்பில்
அங்கலாய்த்து விட்டேன் !
லவ்லி

மோர் குழம்பு - பட்டுக்கோட்டை சமையல் - more kuzhambu

மோர் குழம்பு:

தேவையான பொருட்கள் :
தயிர் -                         1/2 லிட்டர் நன்கு அடித்து வைத்துகொள்ளவும்
பச்சை மிளகாய்     - 4
மஞ்சள் தூள்             -   1/2 டிஸ்பூன்
சீரகத்தூள்                 - 1 டிஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
வெண்டைக்காய்   - 5
உப்பு                            - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு                           - 1/4 டிஸ்பூன்
கறிவேப்பிலை - 1  கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு


செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைத்து சூடானதும் ஆயில் தேவையான அளவு ஊற்றி ஆயில் சூடானவுடன் தாளிக்க கடுகு  சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெண்டைக்காய் சேர்த்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின்  சீரகத்தூள், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கொதிக்க விட கூடாது. சுவையான மோர்க்குழம்பு தயார் .- அகல்யா பிரேம் 

ரௌத்திரம் பழகடி - Brave Women

ரௌத்திரம் பழகடி
சதைகளாய் நினைக்கும் 
சாக்கடைகளை 
சுத்தம் செய்ய
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
பிண்டங்களை பெரும் 
பொருளாய் எண்ணும் 
அற்ப  நாய்களின் 
ஆட்டத்தை அடக்கிட 
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
குரோதத்தில் கொதிக்கும் 
என் 
நெஞ்சம் கொதிப்படக்க 
ரௌத்திரம் 
பழகடி 
என் கண்ணம்மா !
லவ்லி

நினைவுகளின் துளி - thoughts on waterfall

நினைவுகளின் துளி
என்றும் இல்லாத 
அளவிற்கு
இன்று அதிக மழை 
பொழிந்தது !
நினைவுகளை எண்ணி என்றும்
பொழியும் 
மழை தான் 
என்றாலும் இன்று சற்றே அதிகம்
விழி என்ற  
மேகத்தில் இருந்து 
வீழ்ந்த மழைத்துளி 
காய்ந்த 
கன்னங்களில் 
அவன் 
நினைவிற்கு 
நீர் ஊற்றுகிறது !

உன் சுவடு(தமிழ் கவிதை) - Love Soul

உன் சுவடு 
உன்னுடன் நான் செல்ல 
காத்திருந்த 
நொடிகள் எல்லாம்
காற்றாய்
 கரைந்து விட்டது !
என் அருகில்
 உன் சுவாசம்
உணர்வதால் 
நீ வந்த சுவடை
அறிந்ததால் ! 
போதும் கண்ணா
உன் கண்ணாமூச்சி !
லவ்லி

மழைகாலம்(தமிழ் கவிதை) - Love Rain Season

மழைகாலம்
ஆயிரம் மழைக்காலங்கள் 
வந்தாலும் உன்
 அருகில் நான்
இருந்த போது என்னில் 
பொழிந்த
 மழையே நான் ரசித்த
மழைக்காலங்களில்
 மிக அழகு !
லவ்லி

காதல் கவி(தமிழ் கவிதை) - Love Story

காதல் கவி - Love Story 
மலர் கொண்டு மலர் 
இணைக்கும் மகரந்தச் 
சோலையில் மாயவன் மனம் 
மயக்குகிறான் 
மயிலிறகால் !
காற்றென 
அவன் தவழ என் 
ஒற்றை குழல் அசைந்தாட 
அவன் மனமும் 
அசைந்ததை
அன்று நான் உணர்ந்தேன் 
காதல் கவியாக !
லவ்லி

கரிசல் காடானேன் - Karishal Kadanen

கரிசல் காடானேன்
உன் நேத்திரங்கள் 
காணாமல் 
என் அகம் 
மலர மறுக்கிறது !
வசந்தகால 
மலர்வனங்களை 
போல் மனம் மயங்க 
துடிக்கிறேன் ! 
ஆனால் நீ வரும் 
வழியில் உன் வதனம் 
தென்படாததால் 
வறண்ட வான் 
பார்த்த கரிசல் காடகாவே 
இருக்கிறேன் !
லவ்லி

கனல் காதல் - Shadow Love

கனல் காதல்
காரிருள் கரியவன் கதிரவனை
மறைத்து ! 
வான் பார்த்த கழனி 
தன்னை வாஞ்சையாய் தழுவ
நினைத்து ! 
அவன் தீண்ட இயலாஅவளை
 தன் கண் கனல் 
கொண்டு நனைத்தான் 
காதலாக !
லவ்லி

காதல் காலம் - Time to love

காதல் காலம்
உன்னை நான் தழுவவில்லை !
உன் கரம் 
நான் பற்றவில்லை !
என் காதல் 
நீ என்று 
எண்ணவில்லை ! 
ஆனால் 
நிதமும்  உன் தழுவலுடன் 
என் காலையும் ! 
உன்‌ கரச்சூட்டில் 
மையலும் உன் காதலில் 
என் காலமும் 
மகிழ்வாய் மலர்கிறது !
லவ்லி

அர்ப்பணித்தல் - love Contribution

அர்ப்பணித்தல்
காதலின் வெளிப்பாடாய் 
நீ கூறிய வார்த்தைகள்
 ராதை 
கிருஷ்ணனுக்கு உரியவள் !
ஆனால் 
கிருஷ்ணன் ராதைக்கு
உரியவரா ?  
எத்தனை பொருள் 
பொதிந்த கேள்வி !
 காதல் 
ஒருவரை மற்றொருவரிடம்
முழு மனதாய் 
அர்ப்பணித்தல்
எதிர்பார்ப்புகள் 
ஏதும் இன்றி !
காதல் மட்டுமே 
பிரதானமாய் !
லவ்லி

காதல் அலை- Love Wave