மோர் குழம்பு - பட்டுக்கோட்டை சமையல் - more kuzhambu

மோர் குழம்பு:

தேவையான பொருட்கள் :
தயிர் -                         1/2 லிட்டர் நன்கு அடித்து வைத்துகொள்ளவும்
பச்சை மிளகாய்     - 4
மஞ்சள் தூள்             -   1/2 டிஸ்பூன்
சீரகத்தூள்                 - 1 டிஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
வெண்டைக்காய்   - 5
உப்பு                            - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு                           - 1/4 டிஸ்பூன்
கறிவேப்பிலை - 1  கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு


செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைத்து சூடானதும் ஆயில் தேவையான அளவு ஊற்றி ஆயில் சூடானவுடன் தாளிக்க கடுகு  சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெண்டைக்காய் சேர்த்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின்  சீரகத்தூள், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கொதிக்க விட கூடாது. சுவையான மோர்க்குழம்பு தயார் .- அகல்யா பிரேம் 

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave