கணையாழியின் காதல் ( தமிழ் கவிதை) - Krishnan Love (Tamil Kavithaigal)

கணையாழியின் காதல்
நீ கொடுத்த கணையாழியை 
கையில் அணிந்து 
உன் வரவை 
எதிர்பார்த்து காத்திருக்கும்
சகுந்தலை நான்
ஊடல் கொண்ட 
போது எல்லாம் நம் 
நினைவுகளில் நீல கடலில் 
கரைந்த பொழுது 
கணையாழியும் என்னை 
கை விட்டது
உன் நினைவுகள் 
மட்டுமே துணை 
கொண்டு துயில் கொள்கிறேன்
என் நினைவற்று 
நீ உன் மாளிகையில் 
மனம் மகிழ நான் 
உன் நினைவுகளில் 
முழ்கி பசலை 
கொண்டு வாடுகிறேன் !

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave