கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
Showing posts with label Kadhal Kavithai - சுயவடிவிழந்தாய் - One Side Love. Show all posts
Showing posts with label Kadhal Kavithai - சுயவடிவிழந்தாய் - One Side Love. Show all posts
ஆக்ஸிஜன் இழப்பு - Oxygen Loss
ஆக்ஸிஜன் இழப்பு
தாய்மைக்கு முதல் அடி எடுத்து வைக்க
அது முக்கால் அடி
சருங்குகிறது
எத்தனை முறை வீழ்ந்தாலும் !
எழுந்து நிற்கும்
உறுதியுடன்
இதயத்துடிப்பை அதிகபடுத்துகிறாள் !
ஆக்ஸிஜன் குறைபாட்டை
சரிசெய்ய செய்ய
எத்தனை முறை
முயற்சித்தாலும் ?
நடப்பது என்னவோ
ஆக்ஸிஜன் இழப்பு
மட்டும் தான் !
அது முக்கால் அடி
சருங்குகிறது
எத்தனை முறை வீழ்ந்தாலும் !
எழுந்து நிற்கும்
உறுதியுடன்
இதயத்துடிப்பை அதிகபடுத்துகிறாள் !
ஆக்ஸிஜன் குறைபாட்டை
சரிசெய்ய செய்ய
எத்தனை முறை
முயற்சித்தாலும் ?
நடப்பது என்னவோ
ஆக்ஸிஜன் இழப்பு
மட்டும் தான் !
மன்னவனின் மன மயக்கம் (தமிழ் கவிதை) -krishnan-leelaigal
மன்னவனின் மன மயக்கம்
ஆயிரம் முறை பார்த்திருப்பேன்
உன்னை ஆனாலும் இன்று நீ
புதியவளாக என் முன் !
பட்டுத்தி வாஞ்சையாய்
வளையல்
பூட்டி இரு புருவ மத்தியில்
திலகம் இட்டு கருமை அருவியாம்உன்
குழலில் மலர் சூடி உன்
ரோஜாக்கரங்களில்
மருதாணி
மேலும் வண்ணம் சேர்க்க !
மங்கை அவள் கால்
சிலம்பொழிக்க
அன்னமாய்
அசைந்து வருகையில் இந்த
மன்னவனின் மனமும்
மயங்காதோ பேரழகில் !
லவ்லி
ஆழி பேரலையான காதல் (தமிழ் கவிதை) - Deep one side love (Tamil Kavithaigal)
ஆழி பேரலையான காதல்
உன்னால் தான் நான் இன்று
என்னையே ரசிக்க
ஆரம்பித்தேன் !
ஆனால் அங்கு
தான் உணர்ந்தேன்
நான் என்னை ரசிக்கவில்லை !
உன் வார்த்தைகளை தான்
ரசிக்கிறேன் என்று!
உன் காதல் கடலில் கலந்து மூழ்கி
உன்னுள் இணைந்து விட்டேன்!
உன்னில் இருந்து
என்னை பிரித்து
செல்ல யாராலும் இயலாது!
ஆழி பேரலையாக அடித்து
செல்லும் உன் காதல் !
மீண்டும் ராதாகிருஷ்ணராய் (தமிழ் கவிதை) - Again love story - Radha Krishnan - (Tamil Kavithaigal)
மீண்டும் ராதாகிருஷ்ணராய்
மீண்டும் பிருந்தாவனத்தில்
நாம் ராதாகிருஷ்ணனாய்
நாம் ராதாகிருஷ்ணனாய்
பிறக்க வேண்டும் அங்கே யமுனை
நதி கரையோரம்
நதி கரையோரம்
நீ குழலிசைக்க உன் குழல் ஓசையில்
நான் என் உலகம் மறக்க வேண்டும் !
பௌர்ணமி நிலவில் நம் ராசலீலை தொடரவேண்டும்
அங்கே குயில்கள் நம் காதல்
கீதம் பாட வேண்டும் வனம்
எங்கிலும் நம் காதல் பரவும்பொழுது மரங்கள்
மலர்கள் சொரிந்திட வேண்டும் !
மலர்கள் சொரிந்திட வேண்டும் !
இறுதி வரை நான் உன் காதலாக
மட்டுமே இருக்க வேண்டும்
மட்டுமே இருக்க வேண்டும்
உன்னை விட்டு பிரியும்
ஒரு நாள் மட்டும் இம்முறை
அந்த பிருந்தாவனம் சந்திக்கக் கூடாது !
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி (தமிழ் கவிதை) - Minutes of Love (Tamil Kavithaigal)
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி
உன் விரலோடு விரல்
கோர்த்த
அந்த நொடி கோடி யுகங்கள்
உன்னை
கூடிக்கிடந்ததாய்
தோன்றுதே உன் தீண்டல்
என்னை
ஒவ்வொரு நொடியும்
மரணித்து உயிர்
பெற செய்கிறது
முரண்பாடான காதலின் மூத்தவர்கள் (தமிழ் கவிதை) - Genius Lover (Tamil Kavithaigal)
முரண்பாடான காதலின் மூத்தவர்கள்
முரண்பாடான காதலில் வெற்றி
கண்ட முதல்வர்கள் அவளின் மனம் மட்டுமே
அவனுக்கு தேவைப்பட்டது !
ஆயிரம் கோபியர்களின் நடுவில்
ராதை காதல் மட்டுமே
கண்ணனுக்கு கண்ணில் பட்டது !
மூத்தவள் ஆனாலும் அவள்
அன்பில் அளவளாவுவதை
விரும்பியவன் !
அவன் புல்லாங்குழல் இசைக்கு
தன் மனதை பறிகொடுத்தவள் !
இணையா காதல் ஆனால் என்றும்
அவனை அழைக்க
உன் பெயர் தேவைப்பட்டது
ராதாகிருஷ்ணன் !
கணையாழியின் காதல் ( தமிழ் கவிதை) - Krishnan Love (Tamil Kavithaigal)
கணையாழியின் காதல்
நீ கொடுத்த கணையாழியை
கையில் அணிந்து
உன் வரவை
எதிர்பார்த்து காத்திருக்கும்
சகுந்தலை நான்
ஊடல் கொண்ட
போது எல்லாம் நம்
நினைவுகளில் நீல கடலில்
கரைந்த பொழுது
கணையாழியும் என்னை
கை விட்டது
உன் நினைவுகள்
மட்டுமே துணை
கொண்டு துயில் கொள்கிறேன்
என் நினைவற்று
நீ உன் மாளிகையில்
மனம் மகிழ நான்
உன் நினைவுகளில்
முழ்கி பசலை
கொண்டு வாடுகிறேன் !
தனிமை (தமிழ் கவிதை) - Silence for End of Love (Tamil Kavithaigal)
தனிமை - Silence for End of Love
அன்று நாம் தனிமையில்
இருந்ததை
ஆயிரம் கண்கள்
ஆயிரம் கண்கள்
பார்த்தாய் உணர்ந்தேன்!
ஆனால்
இன்று ஆயிரம்
கண்கள்
என்னை பார்த்தும்
தனிமையை
உணர்ந்தேன்
காரணம் இன்று
என் அருகில்
நீ இல்லாததால் !
நீ இல்லாததால் !
மனம் ஏங்கும் மழலை தாகம் - Thirsty for Baby
மனம் ஏங்கும் மழலை தாகம்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சேர்ந்தவள்
அடிவயிறு நிரம்பாததால்
அழைகளிக்கபடுகிறாள் அனாதையாக !
இரத்தத்தில் உதிக்கும்
சூரியனை பெற்றெடுக்க
முயல்கிறாள் ஆனால் மேற்கில்
மறைந்தவனோ உதிக்க
மறுக்கிறான் இவள் மடியில் !
தூக்கனாங்குருவி கூடு - baya weaver nests
தூக்கனாங்குருவி கூடு
எனக்காய் என்னை சுற்றி நான்
கூடு வெய்து கொண்டு இருக்க
அதன் துணையாய்
நீ வந்து உன்
காதல் கொண்டு கூட்டை
முழுமை பெற செய்தாய் !
நீ வெய்த கூட்டில் நான் உன்
காதலின் பாதுகாப்பில் இதமாய்
இடம் கொண்டேன்
நீ பறந்த
பிறகும் உன் காதலின் கதகதப்பு
என்னை இனிமை பெற
செய்கிறது !
என் இந்த
தூக்கனாங்கூட்டில் என்னையும்
உன் நினைவையும் தவிர
வேறொன்றுமில்லை
என் இறுதிவரை
என் இதயமானவனே !
லவ்லி
என்னவள் என்னும் நிலா - Powerful moon lyrics
என்னவள் என்னும் நிலா
ஆயிரம் மலர்கள் தராத
சுகத்தை என் ஒற்றை மகளின்
பால் வாசம் தருகிறது !
அவள் கன்னக்குழி அழகில்
விழுந்து எழுகிறேன்
ஒவ்வொரு
முறையும் அவள்
புன்னகை பூக்கும் போது !
என் வெண்ணிலா தவழ்ந்து
வரும் அழகில்
நட்சத்திரங்கள் கூட
கண் இமைக்காமல்
என்னவளின்
அழகை ரசிக்கும் சற்றே
பொறாமையுடன் !
லவ்லி
விடையில்லா கேள்வி no-end-for-question
விடையில்லா கேள்வி
ஏன் என்னில் நுழைந்து என்
இதயத்தை சில்லுகளாய்
உடைத்தாய் உன் காதலால் !
நான் ஒட்ட வைத்திருந்த
இதயத்தை மேலும்
இணைக்க
முடியா சில்லுகளாய் சிதற
செய்தாய் !
என் துன்பம் உனக்கு
ஏன் இத்தனை ஆனந்தம்
அளித்தது !
நான் இயற்கையாய்
இணைந்திருந்த நாட்களை
இன்று நீ வெறுமையாக்கி
விட்டாய் !
என் விடையில்லா
கேள்வியே !
லவ்லி
Subscribe to:
Posts (Atom)
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...